மருத்துவ சேவையை மக்களின் காலடிக்கு சென்று சேவையாற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின்
PSSP திட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான , 35 வயதை அடைந்த சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச 2800 பேருக்கான தொற்றா நோய்களைச் பரிசோதிக்கும் இரண்டாவது நடமாடும் சேவை புதன் கிழமை 9 காலை சாய்ந்தமருது பௌஸி மைதானத்தருகில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பரின் வழிகாட்டலில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ நடமாடும் வைத்திய சேவையில் வைத்தியர்கள் ,தாதி உத்தியோகத்தர்கள் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment