சட்டவிரோத சிகரெட் பக்கெற்றுடன் சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது



பாறுக் ஷிஹான்-
ட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் திங்கட்கிழமை(28) இரவு பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து சிவில் உடையில் சென்ற உத்தியோகத்தர் குழு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் சந்தேக நபரை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைதானவர் நிந்தவூர் மௌலானா வீதியை சேர்ந்த அஹமது லெப்பை முஹமது றிபாய் - (வயது 52 ) என்பவராவார்.

குறித்த நப ர் மோட்டார் சைக்கிளுடன் 2400 சிகரெட்டு பக்கெற்றினை எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன் பெறுமதி 102000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :