கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நாடும், தேசமும், உலகமும் அவளே என்ற தொனிப் பொருளுக்கு அமைவாக வாகரை கலாச்சார மத்திய நிலையத்தில் மகளிர் தினம் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எந்திரி.ஜி.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலக கணக்காளர் ஜோஜ் ஆனந்தராஜ், அகம் நிறுவன அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாகனங்களில் மகளிர் தினத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், பிரதேச செயலக உத்தியோகத்தரின் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், வாகரைப் பிரதேசத்தில் முன்னுதாரணமாகத் திகழும் பெண்களுக்கான கௌரவிப்பும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.
அத்தோடு பெண் தலைமைத்துவ குடும்பத்தில் உள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ஐந்து பெண்களுக்கு சிறிய உதவித் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment