கல்முனையில் லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கிறிக்கட் திருவிழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனையின் முன்னணி விளையாட்டுக் கழகங்களுள் ஒன்றான லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 13 ஆண்டுகள் நிறைவையொட்டி ஒழுங்கு செய்துள்ள மென்பந்து கிரிக்கெட் திருவிழா இம்மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலும் , மருதமுனை மசூர் மௌலானா சதுக்கத்திலும் இடம்பெறவுள்ளது.

7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் நாடு தளுவிய ரீதியில் 50 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் , இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் சம்பியன்களாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும் , இரண்டாவது அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளதாக லெஜன்ஸ் விளையாட்டுக்கழக செயலாளர் ஏ.எல்.எம்.அஸீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :