திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் மற்றுமோர் மயிற்கல்லாக சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணரான டொக்டர் எஸ்.கமலதீபன் வாரத்தில் மூன்று தினங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பொருட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் வழங்கி வைத்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இச்சந்தர்ப்பமானது இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
சிறுபிள்ளை வைத்திய நிபுணர் ஒருவர் திருக்கோவில் வைத்தியசாலைக்கு முதல் தடவையாக நியமிக்கப்பட்டதனையடுத்து, அப்பிரதேச மக்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
திருக்கோவில் வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டியொன்றினையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ் அண்மையில் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment