காரைதீவு கண்ணகைஅம்பாளின் பங்குனி உத்தரத்திருவிழா ஆரம்பம்



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர மகோற்சவம் நேற்றுமுன்தினம் மாலை வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகியது.
நேற்று(9) புதன்கிழமை முதல்நாள் பூஜை நடைபெற்றது. ஆலய தர்மகர்த்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகனின் உபயத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் திருவிழா இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் தினமும் காலை 10.00 மணிக்கு கும்ப பூஜையும் 12.00 மணிக்கு விசேட பூஜையும் மாலை 6.00 மணிக்கு இரவு பூஜையுடன் நற்சிந்தனையும் வசந்த மண்டபப்பூஜையினைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வெளி வீதி உலாவருதல் இடம்பெறும்.

13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் 16 ஆம் திகதி அம்பாள், விநாயகர், முருகப் பெருமான் சகிதம் முத்துச் சப்பரத்தில் தேரோடும் வீதி வழியாக பவனி வருதலும் இடம் பெற்று 18 ஆம் திகதி காலை நடைபெறும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடனும் 19ஆம் திகதி மாலை நடைபெறும் பைரவர் பூஜையுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :