கல்முனை கல்வி வலயத்திந்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறையும் , சத்தியப்பிரமாணம் செய்தல் மற்றும் சின்னம் சூட்டுதல் இன்று ( 10 )பாடசாலை வளாகனத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது .
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வைத்ததுடன் தலைமைத்துவம் தொடர்பான கருத்தரைகளும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஏ.றாசிக் கௌரவ திதியாக கலந்து கொண்டு தலைமைத்துவப் பண்புகள் தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வினை பாடசாலையின் ஒழுக்காற்று குழுவினர் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment