அஸ்ஹர் இப்றாஹிம்-
தொழில்நுட்பத் துறையில் பரிநாம வளர்ச்சி கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நேரடியாக பிரதேச சபைக்கு வருகைதந்து முறைப்பாடுகளை பதிவு செய்வதிலுள்ள அசெளகரியங்களை குறைத்து மக்களினுடைய தேவைகளை மிகவும் இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் முகநூலினூடாக முறைப்பாடுகளைப்பெற்று அதற்கான தீர்வுகளை உடன் வழங்கும் வகையில் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்ய நிந்தவூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் இப்பொழுது முதல் நிந்தவூர் பிரதேச சபையினூடாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய உங்கள் முறைப்பாடுகளையும் உங்களது சந்தேகங்களையும் பதிவிடக்கூடிய வசதிசெய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment