சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவம் தாங்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் இன்று (08)கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் அவர்களின்
ஒருங்கிணைப்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது உலரணவு பொருட்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்,சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹிட் உட்பட பொலிசார் இணைந்து உலரணவு பொருட்களை மேற் குறித்த பெண் தலைமைத்துக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment