ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இருபத்தைந்தாவது வருடாந்த மாநாடு சனிக்கிழமை 12.03.2022 காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மருதானை அல் ஹிதாய மா.வித்தியாயலத்தில் உள்ள பஹாா்த்தீ்ன் கூட்ட மண்டபத்தில் நடைபெறும்.
இரு அமா்வுகளாக நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் அமா்வில் பிரதம அதிதியாக ஊடக அமைச்சா் டலஸ் அழகப்பெரும கலந்து கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய லோக்சபா பாராளுமன்ற உறுப்பிணா் நவாஸ் கனி கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பிப்பதோடு கலாநிதி எம்.சி. ரஸ்மின் முஸ்லிம்களும் ஊடக எதிா்காலமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவாா்.
இரண்டாவது அமா்வில் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடைபெறும். புதிய உத்தியோகத்தா்கள் தெரிவும் மற்றும் யாப்புத்திருத்தம் பற்றிய செயற்குழு பிரேரணையும் இதன்போது ஆராயப்படும்.
சுகாதார முழுமையாகப் பேணி இம்மாநாடு நடாத்தப்படவிருப்பதால் அங்கத்தவா்களுக்கு இம்மாநாடு நடைபெறவிருப்பதாக போரத்தின் செயலாளா் என்.ஏ.எம் சாதிக் சிஹான் தெரிவித்தாா்.
5வது முறையாக வெளியிடும் முஸ்லிம் மீடியா அங்கத்தவா்களும் மற்றும் ஊடக தகவல்கள் அடங்கிய டிரக்ரரி வெளியிடப்பட்டு முதற்பிரதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்படும். ஏனைய ஊடக சங்கங்கள் மற்றும் ஊடக சம்பந்தமான தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளும் இம் மாநாட்டில் கலந்து கொள்வாா்கள்.
0 comments :
Post a Comment