மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் மர்ஹூம்.அபுல்கலாம் பழீல் மௌலானா இவரது மறைவு பேரிழப்பாகும். -பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி.



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையின் மூத்த கல்விமானாக இருந்து நாட்டின் பல பாகங்களில் கல்விப் பணியாற்றி மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் மர்ஹூம்.அபுல் கலாம் பழீல் மௌலானா அவர்கள் இவரது மறைவு மருதமுனைக்கு மாத்திரமன்றி நாட்டின் பல பாகங்களின் கல்விப்பின்புலத்திற்கு பேரிழப்பாகும்.மாணவ சமூகத்தை கல்வியின் பால் ஈர்க்கச்செய்து சிறப்பான கல்வியைப் புகட்டியவர் பழீல் மௌலானா என கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

மர்ஹும் பழீல் மௌலானாவின் 9வது ஆண்டு நிறைவு நிறைவையொட்டி பழீல் மௌலானா பவுண்டேஷன் ஏற்பாட்டு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் மருதமுனையில் பவுண்டேஷனின் தலைவரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான எப்.எம்.அமீறுல் அன்ஸார் மௌலானாவின் இல்லத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி இவ்வாறு தெரிவித்தார்.

பவுண்டேஷனின் தவிசாளரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமட் அன்ஸார் மௌலானா (நழீமி)தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும். சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஊடக வித்தகருமான கவிஞர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் கடந்த 34 வருடங்களாக ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி பொன்னாடை போர்த்தி.பொற் கிளி வழங்கி கௌரவித்தார்.

மேலும் மருதமுனை மஸ்ஜிதுன்நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் நீண்ட காலமாக பேஸ் இமாமாகக் கடமையாற்றிவரும் அல்ஹாபிழ் மௌலவி ஏ.ஆர்.ஜரீர் (பஹ்மி)அவர்களுக்கு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.ஹஸீப்; இவருக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மேலும்; அல்ஹாபில் பட்டம் பெற்ற எம்.ஜே.எம்.அல்பத்,க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தரப் 9 ஏ.சித்தி பெற்ற மாணவி எம்.எச்.கார்னி ஹிஷாம் ஆகியோருக்கும் பொன்hடை போர்த்தி கௌவித்ததுடன் மாணவி ஏ.எறூன் அப்தா பரிசுப் பொதி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இந்த நிகழ்விவுக்கு வர்த்தகர் ஏ.கே.எம்.நழீர் அனுசரணை வழங்கியிருந்தார்.

இங்கு தபாலதிபர்,பி.எம்.அஸ்கர்,பவுண்டேஷனின் பொருளாளரும்,ஆசிரிய ஆலோசகருமான கபீல் முஸ்தபா உள்ளீட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இங்கு பழீல் மௌலானா பவுண்டேஷனின் செயலாளரும், ஊடகவியலாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன் நிகழ்வை நெறிப்படுத்தினார். அறிவிப்பாளர் ஹிஷாம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :