ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் எம்.கே.வீதி ஓட்டமாவடி 03, ல் வசிக்கும் அப்துல் ஸலாம் முகம்மது அரூஸ் என்பவர் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையளராக நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா மக்கள் கட்சி தலைமைச் செயலாளரும், இலங்கை சுதந்திர மக்கள் கூட்டமைப்பு உப செயலாளரும், இலங்கை பாராளுமன்ற அரச கொறடாவும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரட்ணவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளார்.
அப்துல் ஸலாம் முகம்மது அரூஸ் என்பவர் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மும்மதமும் சார்ந்த நிகழ்வுகளை அரச அதிகாரிகளின் பங்குபற்றளுடன் முன்கொண்டு சென்றுள்ளார். அத்துடன் மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும் திறம்பட செயற்படுகிறார்.
0 comments :
Post a Comment