மடத்தடியில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த இருவருடங்களுக்குப்பிறகு மஹாசிவராத்திரி விரதம் 4சாமப்பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான புதிய நிருவாகம் ஆலயத்தை மிக்கொளியால் அலங்கரித்திருந்தது.
ஆலய அர்ச்சகர் ரி.கணேசன் மகாசிவராத்திரி விசேட பூஜையை நடாத்தினார்.

இரண்டதம் சாமப்பூஜை நிறைவில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் ஆலய கும்பாபிசேகம் தொடர்பாக விளக்கவுரை நிகழ்த்திய அதேவேளை சிவராத்திரி தொடர்பான சிறப்புரையை ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

தினமும் யானை வரும் அப்பிரதேசத்தில் பக்தர்கள் விடியவிடிய கண்விழித்து விரதத்தை பூர்த்திசெய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :