கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு கொழும்பு மத்தி ரோட்டரி கழகத்தினால் கணினிகள் வழங்கி வைப்பு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
கொழும்பு மத்தி ரோட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் கல்முனை கல்வி வலய பிரிவில் உள்ள கல்முனை கமு/ கமு-அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் முகமாக பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை -அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்தினரால் (Rotary club of Colombo Mid town) 10 கணினிகள் அன்பளிப்பாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களிடம் கொழும்பு மத்தி ரோட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் 10 கணினிகள் பாடசாலையில் வைத்து இன்று(10) கையளிக்கப்பட்டது.

கொழும்பு மத்தி ரொட்டரி (Rotary club of Colombo Mid town) கழகத்தின் தலைவர் அர்சாட் ஜமால்ட்டீன், கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் இஸ்மாயில்,ஜி.எஸ் சில்வெஸ்டர், நுஹ்மான் சிராஜுதின்,அஸ்வான் பங்சஜயா மற்றும் சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக்,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்,என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களின் நலன் கருதி குறித்த உதவியை செய்தமைக்கு பாடசாலை சமுகம் சார்பில் குறித்த கொழும்பு மத்தி ரொட்டரி கழகத்திருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் நன்றியினை இதன் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :