மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு (22) இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள தாய், தந்தையற்ற பிள்ளைகளைப் பராமரித்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுமிடமாக அமைந்துள்ள றவ்ழத்துல் அத்பால் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல்லினை அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாதிஹ் நட்டி வைத்தார்.

இந்நிலையமானது நீண்டகாலமாக சுற்று மதிலின்றி காணப்பட்டதனால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற அசௌகரிய நிலையும் காணப்பட்டது.

இந்நிலையை சமூகசேவையாளரும் அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மது பாதிஹின் கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கமைய உடனடியாக அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :