சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்றன இல்லாமையால் சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக ஹோட்டல்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
குறிப்பாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாத துப்பாக்கிய நிலைக்கு சம்மாந்துறை பிரதேச ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால், ஹோட்டல்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.

ஹோட்டல்கள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளமையால் ஹோட்டல் உரிமையாளர்கள் வருமானத்தை இழந்துள்ளார்கள். அத்தோடு ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர்களும் தொழில்லாத நிலைக்குள்ளாகி உள்ளார்கள்.

இதனால், ஹோட்டல் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளர்கள்.மேலும், சமையல் எரிவாயுவுடன் கோதுமை மா, பால்டின் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அத்தகைய பொருட்களை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆதலால், ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :