காரைதீவில் கடல் கொந்தளிப்பு:மீனவர் தொழில் பாதிப்பு கடல்நீர் பெருக்கெடுப்பு : தோணிகள் கரையில்: அதற்குள் களிப்பு



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவில் திடிரென நேற்றுமுன்தினம்(10)மாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடல்நீர் பெருக்கெடுத்து கரையிலிருந்த தோணிகளை பந்தாடியது. மீனவர்கள் உசாராக செயற்பட்டு தோணிகளை நீண்டதூரம் கரைக்கு கொண்டுவந்து வைத்துள்ளனர்.
கடல்நீரும் பெருக்கெடுத்ததால் கரையிலிருந்த பள்ளத்திற்குள் நீர்நிறைந்தது. அதற்குள் தோணிகளை ஓட்டி சிறுவர்கள் மக்கள் குதூகலித்தனர்.

இதேவேளை கடற்கொந்தளிப்பால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. ஆழ்கடல் மீன்பிடியோ கரைவலை மீன்பிடியோ எதுவுமே இடம்பெறவில்லை. அதனால் நேற்று(11) மீனுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :