யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை!


யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று 2022 ஆம் ஆண்டு மே 15 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் ஸ்தாபக தலைவர் இஷட்.எம் ஸாஜீத் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

இதில் பிரதான வளவாளராக சிரேஷ்ட ஊடகவியாளாரும் விடியல் இணையத்தள செய்தியின் தலைமை ஆசிரியருமான றிப்தி அலி கலந்து கொண்டார். இதில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசத்திலிருத்து பல்கலைக்கழக மாணவர்கள்,உயர்கல்வி மாணவர்கள்,இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பங்குபற்றினர். அத்துடன் யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் இவ் பயிற்சிப்பட்டறை பூரண ஓத்துழைப்பு வழங்கினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :