சிறு கைத்தொழிலாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வு



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம்-தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கிராம சேவகர் பகுதியில் சிறு கைத் தொழில் முயற்சியாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று நாராயன்மார்திடல் கிராம கட்டிடத்தில் நேற்று (26) மாலை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க இந் நிகழ்வு இடம் பெற்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் உணவு உற்பத்தி தொடர்பிலான மேம்படுத்தல்களுக்கு உறுதுனையாக செயற்படுவது தொடர்பிலும் இவ் விழிப்புணர்வில் வளவாளராக கலந்து கொண்டவர்கள் பயிற்சியினை திறம்பட வழங்கினர்.

உள்ளூர் உணவு உற்பத்தியை கொண்டு சந்தைப் படுத்தல் வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொண்டு சுயதொழிலை முன்னேற்றம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் பயிற்சி உட்பட தொழில் வழிகாட்டல்கள் அதற்கான ஊக்குவிப்புக்கள் தொடர்பிலும் இதன் போது பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உதவியாளர் எஸ்.ஐங்கரன் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய நிறுவனங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :