கோட்டா கோ கமவில் எம்மால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய முடியுமாக இருந்தால் மட்டக்களப்பில் மாத்திரம் ஏன் தடை – சாணக்கியன் கேள்வி



ட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டா கோ கம உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருவதாகதாக தெரிவித்த அவர், ஆனால் மட்டக்களப்பில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 600 பேர் இதனால் நினைகூரலில் ஈடுபடமுடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வை ஒரு அமைப்போ அல்லது கட்சியோ ஏற்பாடு செய்ததற்கான ஆதாரம் இல்லாத நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மக்கள் நினைவுகூரல் நிகழ்வில் ஈடுபடுவதைத் தடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பதாதைகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் அகற்றுமாறு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்க அனுமதி வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்திருந்த நிலையில், இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :