திருகோணமலைக் கடற்பிராந்தியம் மீனவப் படகுகளால் முற்றுகை



அஷ்ரப் அலீ-
திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் தற்போதைக்கு முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
சுமார் 150 படகுகளில் ஒரு படகில் தலா எட்டுப் பேர் வீதம் மீனவர்கள் ஒன்றுதிரண்டு கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
கடற்படைக் கப்பல் மூலம் ராஜபக்‌ஷ குடும்பம் தப்பிச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்படையின் டோரா வள்ளம் ஒன்றிற்குள் ராஜபக்‌ஷ குடும்பம் தற்போதைக்கு ஏறி உள்ளே பதுங்கிக் கொண்டு தப்பிச் செல்ல தருணம் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையின் அயல்புற மீனவர்களும் தங்கள் படகுகளுடன் திருமலைத் துறைமுக முற்றுகைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :