திருக்கோவில் பிரதேசத்தில் டீசல் மண்ணெண்ணெய் பிரதேச செயலகத்தின் முறையான ஒழுங்கமைப்பில்



வி.ரி. சகா தேவராஜா-
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் , மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முறைப்படி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுக்கொண்டுவருகின்றது...

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற பொது மக்களுக்காக திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றம் விவசாய கமநல சேவை,நிலையம் ஊடாக அனுமதி அட்டை(ரோக்கன்) வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று குறித்த அதிகாரிகள் கூடி ரோக்கனை விநியோகம் செய்து எரிபொருளை முறைப்படி வழங்கினர்.
மேலும் இவ் நிகழ்ச்சி திட்டமானது திருக்கோவில்,பிரதேச செயலாளரின்,நேரடி கண்காணிப்பிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், திருக்கோவில் பல்நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற வருகின்றது .
மேலும் இனிவரும் பெற்ரோல் தவிர்ந்த டீசல் ,மண்ணெண்ணெய் ஆகியவை ரொக்கன் அதாவது அனுமதி அட்டை மூலம் வழங்கப்படும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :