ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு !



நூருல் ஹுதா உமர்-
புனித ரமழானைச் சிறப்பிக்கும் முகமாக ஆர் ஜே கலை கலாசார ஊடக வலையமைப்பு தனியார் கல்வி நிறுவனமொன்றுடன் இணைந்து நடாத்திய ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் நாடளாவிய ரீதியில் முதல் 15 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப் போட்டி நிகழ்ச்சியில் இதன் போது தெரிவு செய்யப்பட்ட முதல் 15 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் செயினுலாப்தீன் நஜிமுதின், ஆர் ஜே கலை கலாசார ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் உட்பட பல்வேறுபட்ட முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :