பெற்றோல் வேண்டும் என்று ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிறப்பு நிலையத்தில் தனிப்பட்ட சிலருக்கு பெற்றோல் விற்பனை இடம்பெறுவதாக கூறி பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) இரவு ஐந்து மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (24.06.2022) அரச உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கம் ஓட்டமாவடி எரிபொருள் நிறப்பு நிலையத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் பெற்றோல் வினியோகம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த நாள் சனிக்கிழமை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் பெற்றோல் பம் பழுதடைந்த நிலையில் பெற்றோல் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இன்று புதன்கிழமை பழுதடைந்த பெற்றோல் பம் திருத்தப்பட்ட நிலையில் பெற்றோல் வினியோகம் இடம் பெற்றதாகவும் பொது மக்களுக்கு பெற்றோல் வினியோகம் இடம்பெறவில்லை எரிபொருள் நிறப்பு நிலையத்தில் ஊழல் இடம் பெறுகின்றது தொடர்ந்து இரவு நேரங்களில் தனிப்பட்டவர்களுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படுகின்றது என்று கூறி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மேம்பாலத்திற்கு முன்பாக வாகன போக்குவரத்தை மறித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

அவ் விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடுன் கலந்துரையாடிய போது எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை பொது மக்களுக்கு காட்டினால் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்தில் இருந்து எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு ஆர்ப்பாட்ட காரர்களை அழைத்துச் சென்ற வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெற்றோலி கூட்டுத்தாபன அதிகாரி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடி நாளை 30.06.2022 (வியாழக்கிழமை) காலை 08.30 மணிக்கு எரிபொருள் நிறப்பு நிலையத்தில் இருப்பை பரிசோதிப்பது என்றும் இருப்பு இருக்கும் பட்சத்தில் அதனை பொது மக்களுக்கு வினியோகிப்பதற்கு தான் பொறுப்பு நிற்பதாகவும் தெரிவித்ததற்கிணங்க ஆர்ப்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.

நாளை வியாழக்கிழமை எரிபொருள் இருந்தால் வினியோகிக்கப்படும் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :