திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வொன்று இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க குறித்த நிகழ்வு நேற்று (21) கிராம சேவகர் கட்டிடத்தில் இடம் பெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுயதொழிலை மேலும் விருத்தி செய்யும் முகமாவும் ஊக்கப்படுத்தவும் இந் நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வளவாளராக தம்பலகாமம் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் கலந்து கொண்டார்.
இதில் சிறு கைத் தொழில் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான பறூசா,சிஹானா மற்றும் விதாதா வளநிலைய உத்தியோகத்தர் நபீர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ரொகான் ,சுயதொழில் முயற்சியான்மையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment