இளம் பெண்கள் மாதர் அமைப்பினால் இன, மத பேதமின்றி சகல சமயத்தையும் சார்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்படுத்தவும், கஸ்டப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள அபேயபுர மகப்பேற்று மருத்துவமனை நிலையத்தில் மாதாந்த பரிசோதனைக்காக வருகை தந்த நூற்றிக்கும் மேற்பட்ட கற்பிணித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள மதிய போசன உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இளம் பெண்கள் மாதர் அமைப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹாவின் ஏற்பாட்டில் பொலன்னறுவை ஹனிபா ஹாஜியாரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு கனடியன் இலங்கை முஸ்லிம் பெண்கள் அமைப்பும் தமது அனுசரணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment