சாய்ந்தமருதில் தமிழ் நாட்டின் நிவாரணப் பொதிகள் விநியோகம்



அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்-
ந்திய உதவித் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உணவு நிவாரணப் பொதிகள் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் நேற்று புதன்கிழமை (08) ஒரு தொகை பயனாளிகளுக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம் உட்பட கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கும் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அரிசி, பால்மா போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இந்நிவாரண உதவியைப் பெறுவதற்கு 1760 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :