மகளிர் நல ஆலோசணை மற்றும் மேம்பாட்டு மையத்தினால் போதைப்பொருள் ஒழிப்பும் பிள்ளைவளர்ப்பும் எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று மகளிர் நல ஆலோசணை மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவி ஜனாபா சேகு பரீஹா றுஸ்தி அவர்களின் தலைமையில் மட்/மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS_நழீம், லெப்டினன் கேனல் D அனஸ் அஹமட் , பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr. சாபிறா வஸீம், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் Dr ஜலீலா, விரிவுரையாளர் அஷ்ஷெய்க் MTM றிஸ்வி, ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் நஸீரா எஸ் ஆப்தீன், ஆசிரியை NM ஆரிபா, சமூக சேவை உத்தியோகத்தர் M நஜிமுதீன், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் செயலாளர் சட்டத்தரணி AL முனீர், ஏறாவூர் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், (ஐயங்கேணி, மிச்நகர், மீராகேணி) பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இச்செயலமர்வில் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் MTM றிஸ்வி அவர்களினால் போதை பொருள் ஒழிப்பும் பிள்ளை வளர்பு தொடர்பாக விசேட சொற்பொழிவு ஆற்றப்பட்டது
0 comments :
Post a Comment