"மன்னார் - புத்தளம் பாதையினை திறக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமரிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!


ஊடகப்பிரிவு-
க்களின் தேவை கருதி பாவிக்கப்பட்டு வந்த மன்னார் - புத்தளம் (எலுவன்குளம் ஊடான) வரையிலான பாதையினை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோளினை முன்வைத்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, நேற்று (17) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, அவர் குறித்த வேண்டுகோளினை முன்வைத்தார்.
வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான பொருளாதார ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும், இப்பாதை ஊடாக அத்தியாவசிய தேவைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலும், மக்களின் பாவனைக்கேற்றவாறு இப்பாதையினை புனரமைத்து, மீள திறந்துவிடுமாறு பிரதமரிடம், ரிஷாட் எம்.பி கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :