கோலாகளமாக ஆரம்பமான மியண்டாட் எப்.எஸ்.கே.மியன்டாட் பிரிமியர் லீக் சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்று போட்டி



எம்.என்.எம்.அப்ராஸ்-
சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற எப்.எஸ்.கே.மியன்டாட் பிரிமியர் லீக் சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்று போட்டி மிக கோலாகளமாக சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (13)புதன்கிழமை இடம்பெற்றது
ஆரம்பமாக வீரர்களின் அறிமுகத்துடன் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றது

மாளிகா யூனைடட் மற்றும் வோலி லயன்ஸ் அணி சாந்தம் சலன்ஜேஸ் மற்றும் மருதூர் வோரியஸ் அணி மருதூர் வோரியஸ் மற்றும் மாளிகா யூனைடட் ஆகியன அணிகளுக்கிடையே ஆரம்ப நாளில் போட்டிகள் இடம்பெற்றது

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுத்தொடர் தலைவர் ஏ.ஏ.ஹலீம்,கழகத்தின் தலைவர் ஏ.பாயிஸ், தவிசாளர் எம்.ஜே.எம். காலித், கழகத்தின் உரிமையாளர்கள் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

அம்பாரை மாவட்டத்தில் 30 வருடத்துக்கு மேல் வரலாற்றை கொண்ட முன்னணி கழகமான சாயந்தமருது மியான்டாட் கழகத்தின் சுமார்80 கடின பந்துவிளையாட்டு வீரர்கள் குறித்த போட்டியில் மொத்தமாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் (15)ஆம் திகதி அன்று எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் சீசன் -2” நிறைவடையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :