நாளை சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை திறப்பு விழாவும் ,75 ஆவது மகாசமாதி தின நிகழ்வும்



காரைதீவு நிருபர் சகா-
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வும், அடிகளாரின் சிலை திறப்பு விழாவும் நாளை 19.07.2022 (செவ்வாய்க்கிழமை) காலை அவர் அவதரித்த காரைதீவில் நடைபெறவிருக்கின்றன..

விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் நிறுவப்பட்ட அடிகளாரின் மார்பளவிலான சிலை திறந்து வைக்கப்படவிருக்கின்றது.
மட்டக்களப்பு, இராமகிருஷ்ண மிஷன், உதவிப் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் திருமுன்னிலை அதிதியாக கலந்து கொண்டு அடிகளாரின் சிலையை திறந்து வைக்கவிருக்கிறார்.

அங்கிருந்து ஊர்வலமாக சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தை அடைந்ததும் அங்கு பணி மன்றத்தின் தலைவர் வெ. ஜெயநாதன் தலைமையில் 75 ஆவது ஆண்டு மகா சமாதி தின வைபவம் ஆரம்பமாகிறது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம்ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.

மேலும், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் ,கல்முனைவலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், திருக்கோவில் வலய பிரதி கல்வி பணிப்பாளர் சோ.ஸுரநுதன், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கௌரவ ,சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
மேலும்,பாடசாலை அதிபர்கள், நற்பணி மன்ற நிறுவுனர்கள், அறங்காவலர் ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலை, மற்றும் கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்கள் பங்குபற்றலுடன் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் பிரதான வீதி ஊடாக, கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியை அடைந்து, சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்படும் நிகழ்வு ஆரம்ப நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

சுவாமி விபுலாநந்தரின் இல்லத்தில் குருதேவருக்கான பூசை வழிபாடுகள் மற்றும் சுவாமிகள் திருவுருவச் சிலைக்குப் பூமாலை அணிவித்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் திறந்து வைத்தல், தேவாரம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, ஆசியுரை மற்றும் தலைமை உரைகளினைத் தொடர்ந்து, சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள், இந்து கலாசார ஒன்றிய அறநெறிப் பாடசாலை மற்றும் முருகன் ஐக்கிய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு நிகழ்வுகள், இலங்கை தொலைக்காட்சி புகழ் கல்முனை சிவா அவர்களின் விபுலகீதங்கள் சிறப்பிசை நிகழ்வு, சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆகியவை இடம்பெறவுள்ளன என்று பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :