இறை தூதர் இப்றாஹிமின் துணிச்சல்,தியாகங்களால் சவால்களை வெல்வோம்



ஜ்ஜின் கோட்பாடுகளை கடைப்பிடி த்து வாழ்வின் இலட்சியங்களை வெல்வதற்கு,இந்தத் தியாகத்திரு நாளில் திடசங்கற்பம் கொள்வோமெ ன இலக்கியப் புரவலர் ஹாஸிம்உமர் தெரிவித்துள்ளார்.புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இறைதூதர் இப்றாஹிமின் இலட்சிய ங்களில்,வெற்றிப்படிகள் விரவிக் கிட க்கின்றன.இதைக் கடைப்பிடித்தால் எந்தச் சவால்களையும் வெல்லலாம். நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக ள் நீங்குவதற்கு இயன்றளவில் தியா கங்களைச் செய்வதுதான் சிறந்தது.

மனித சஞ்சாரமேயில்லாத மக்கா பாலைவனத்தில்,தனது பாலகனையு ம் மனைவியையும் தனியே வைத்து விட்டு வந்த,இறைதூதர் இப்றாஹீம் ஒரு நாகரிகத்துக்கே வழிகாட்டிச் சென்றார்.அவரது தைரியத்தில் ஒரு நாகரிகமே உருவானது.இதே,தைரிய ம் மற்றும் துணிச்சலூடாகவே,நமது சவால்களையும் நாம் வெல்ல வேண்டும்.இந்த நன்னாளில்,முஸ் லிம்களின் ஹலாலான இலட்சியங் கள் நிறைவேற பிரார்த்திப்பதாகவும் புரவலர் ஹாஸிம் உமர் தெரிவித்து ள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :