பாராளுமன்றத்தில் இன்று முக்கிய அறிவிப்பு!



னாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.

இதன்படி. ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் கூட்டப்படவுள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகரினால் ஜனாதிபதி வெற்றிடம் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தை இன்றைய தினம் கூட்டுவதற்கான வர்த்தமானி பாராளுமன்ற செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் சிறப்பு ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் 04 பிரிவின் பிரகாரம் இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :