உப‌ ஜ‌னாதிப‌திக‌ள் இருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். -ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்



ப‌ ஜ‌னாதிப‌திக‌ள் இருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் அவ‌ர்க‌ள் முஸ்லிம், த‌மிழ் ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என‌வும் பிரத‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ முன் வைத்த‌ கோரிக்கையை நாட்டின் எதிர்கால‌ ந‌ல‌னை முன்னிட்டு பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி ஏற்றுக்கொள்ளாமை பெரும் த‌வ‌றாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

கௌர‌வ‌ பிர‌த‌ம‌ர் ர‌ணில் முன் வைத்த‌ இக்கோரிக்கையை ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ நிராக‌ரித்திருப்பதாக‌ அறிய‌ முடிகிற‌து.

இரு உப‌ ஜ‌னாதிப‌திக‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) முன் வைத்துள்ள‌ தீர்வுத்திட்ட‌த்திலும் உள்ள‌து.

பிர‌த‌ம‌ரின் இக்கோரிக்கையை பொதுஜ‌ன‌ பெர‌முன‌ உறுப்பின‌ர்க‌ள் ஏற்க‌வில்லை என்றும் இதை ம‌காநாய‌க்க‌ர்க‌ள் ஏற்க‌மாட்டார்க‌ள் என‌ சொன்ன‌தாக‌வும் த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

ம‌காநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் விரும்புவ‌து போன்று இங்கு யாரும் ஆட்சி செய்வ‌தை காண‌வில்லை. நாட்டை கொள்ளைய‌டிக்காதீர்க‌ள், ஊழ‌ல், ல‌ஞ்ச‌ம் வேண்டாம் என‌ ம‌காநாய‌க்க‌ தேர‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டிருந்தால் நாடு இந்த‌ள‌வு மோச‌மாகியிருக்காது.
இர‌ண்டு உப‌ ஜ‌னாதிப‌திக‌ளினால் ஒன்றும் பெரிதாக‌ சாதிக்க‌ முடியாது என்ப‌து உண்மை. ஆனாலும் ந‌ம‌து நாடு ப‌ற்றிய‌ ந‌ல்ல‌பிப்பிராய‌ம் ச‌ர்வ‌தேச‌த்தில் ஏற்ப‌டும். சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கும் கௌர‌வ‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தை உல‌குக்கு காட்ட‌ முடியும். இது நாட்டில் இன‌ங்க‌ளுக்கிடையிலான‌ அதிகார‌ போட்டியையும் குறைக்கும்.

ஆக‌வே பிர‌த‌ம‌ர் ர‌ணிலின் இந்த‌ கோரிக்கையை எம‌து க‌ட்சி பெரிதும் வ‌ர‌வேற்ப‌துட‌ன் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வும் இதை நிராக‌ரிக்காம‌ல் ஏற்றுக்கொள்வ‌த‌ன் மூல‌ம் அக்க‌ட்சி இன‌வாத‌ க‌ட்சிய‌ல்ல‌ என்ப‌தை காட்ட‌ முடியும்.


முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி
(உல‌மா க‌ட்சி)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :