புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம்!



லங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த அவரை சபாநாயகர் வரவேற்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மேலதிக வாக்குகள் 52 இனால் தெரிவு செய்யப்பட்டார்.

வாக்களிப்பில் 223 பாராளுமன்ற உறுப்பினரகள் கலந்து கொண்டிருந்த நிலையில் அதில் இருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.

இதற்கமைய, ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :