இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை



லங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு பொறிமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், விரைவாக செயற்படுமாறு அனைத்து கட்சித் தலைவர்களிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் குறித்தான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை என அதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோர் அதில் கையொப்பம் இட்டிருக்கின்றார்கள்.

நாடு சமூக, அரசியல், பொருளாதார ஸ்திரமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :