யக்கபிட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரி விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம்



J.f.காமிலா பேகம்-
ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்களின் ஆலோசணையின் பேரில் ஐந்து பேர் கொண்ட இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் மற்றும் அதன் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி இடைநிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வதற்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் திங்கட்கிழமை (4) இந்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பாக ஆராய்வதற்கு பிரிகேட் தளபதியின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதி நீதிமன்றத்தை நியமித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :