அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து கிளையின் இணைப்பாளராக ப. பிரதீபனும், செயலாளராக எம். விக்னேஸ்வரனும் ஊழியர்களால் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

அதே போல இக்கிளைக்கு நிர்வாக உறுப்பினர்களாக சுகாதார பிரிவில் வி. தர்மராஜாவும், வேலை பகுதியில் எம்.ஏ. அனஸும், பாதுகாப்பு பிரிவில் டி. பாஸ்கரனும், சாரதிகள் சார்பாக எஸ். கேதீஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக ஆலோசகராக க. பத்மராஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.

குட்ட, குட்ட தலை குனிந்த காலம் போய் விட்டது, அநியாயம், அக்கிரமம் ஆகியவற்றுக்கு பயந்த காலம் மலையேறி விட்டது என்று கிளை நிறுவப்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். மாநகர சபை நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள், எதிர்ப்புகள், கெடுபிடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் கிளையை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பதாக சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :