புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் போது தமிழ் பேசும் கட்சிகள் மக்களின் அபிலாசைக்கு இடம் கொடுக்க வேண்டும்



பாறுக் ஷிஹான்-
மிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எமது நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் நாட்டு மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தார்மீக பொறுப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட குருபீட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் நாட்டின் ஜனாதிபதி பதவி விலகியதன் காரணமாகவும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் ஒரு சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்யக்கூடிய பொறுப்பு தமிழ் பேசும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து முஸ்லீம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதியை தெரிவு செய்யக்கூடிய தார்மீக பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :