முப்பது வருட கால யுத்தத்தில் கொல்லப்பட்ட சிப்பாய்களின் உயிர்களின் மதிப்பை இல்லாமலாக்கி விட்டார்கள்.
போர்க்களத்தில் சிந்திய இரத்தத்தை களங்கப்படுத்தி விட்டார்கள்.
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு அதை விட கேவலமானவரிடம் இருப்பதற்கு தூணாக, துணையாக நிற்கிறார்கள்.
உண்மையில் தேசத்துரோகி என்பவன் யார் ? நாட்டின் இறைமையை நாசமாக்கும் இவர்களின் ஆடைகளில் எதற்கு தேசிய இலச்சினை??
அணிந்த சீருடைக்கு கௌரவம் கொடுக்காதவனால் நாட்டின் தனித்துவத்தை ,மதிப்பை காத்திட முடியாது. உதை பட்டவனை பிடித்திருந்த கைகளில் மாதமொரு முறை கிடைத்த சம்பளம், அவனுடைய வரிப்பணம்.. உதைத்தவன் அணிந்த காலணி, அந்த குடிமகனின் வியர்வை போட்ட பிச்சை....
யார் வரிப்பணத்தில் வயிறு வளர்த்து,வம்சம் வளர்த்தானோ அவனையே எட்டி உதைப்பவன் தான் முதலில் பிடுங்கியெறியப்பட வேண்டிய களை.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில், வியர்வையில், ரத்தத்தில் வயிறாற சாப்பிட்டு விட்டு அதே நாட்டு மக்களுக்கு துரோகமிழைப்பவனுக்கும் சுமந்த தாயை காமுகனிடம் விற்பவனுக்கும் வித்தியாசமில்லை.
தேசத்தை குற்றுயிராக்கும் புற்று நோய்கள் இவர்கள்,தேசாபிமானிகள் இல்லை.
தேசிய வீரர்கள் என்று செல்லாதீர்கள். தேசிய கீதத்திற்கு விறைத்து நிற்பதற்கும் தேசிய கொடிக்கு சிரம் தாழ்த்துவதற்கும்
இந்த நயவஞ்சகர்க்கு எதுவித உரிமையோ தகுதியோ இல்லை.
இவர்கள் சல்யூட் அடித்த போதெல்லாம் தேசிய கொடியிலுள்ள சிங்கம் அசிங்கப்படுத்தப் பட்டிருக்கும்..
0 comments :
Post a Comment