ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச ஆட்டோ சாரதிகள் மகஜர் கையளிப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி சங்கங்கள் தங்களுக்கு பெற்றோல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரண்டு பிரதேச செயலகங்களிலும் தங்களது மகஜர்களை இன்று (திங்கள் கிழமை) கையளித்தனர்.

ஆட்டோ ஓட்டுவதை தங்களது வாழ்வாதரமாக கொண்ட ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளதாகவும் தங்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கு பெற்றோல் கிடைக்காதது மிகவும் சிரமமாகவுள்ளதாகவும் எமது பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வரும் போது எங்களுக்கும் முன்னுரிமை பெற்றுத்தருமாறு கோரிக்கையை மகஜராக இரண்டு பிரதேச செயலகங்ளிலும் கையளித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான மகஜரினை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மிலிடமும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான மகஜரினை பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத்திடமும் கையளித்தனர்.

பிரதேச செயலகங்களில் கையளிக்கப்பட்ட மகஜர்களுள் மாவட்ட செயலாளருக்கான பிரதியும் வழங்கப்பட்டது.

ஓட்டமாவடி ஆட்டோ சாரதிகள் சங்கம், கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கம், மீறாவோடை பதுரியா மாஞ்சோலை ஆட்டோ சாரதிகள் கூட்டுறவு சங்கள் இணைந்து இந்த மகஜர்களை கையளித்தன.

இந்த கோரிக்கை மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு தங்களுக்கான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று இரண்டு பிரதேச செயலகங்களிலும் மகஜர்களை பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மகஜர்களை கையளிக்கும் நிகழ்வில் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், ஆட்டோ சாரதிக் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :