தன்னாமுனையில் பாரிய விபத்து - ஸ்தலத்தில் இருவர் பலி!!



ஏறாவூர் சாதிக் அகமட் -
ட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்தலத்திலேயே 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞர்கள் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது முச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில், மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த கனரக வாகனத்தில் (லொறியுடன்) மோதிய வேளையிலேயே குறித்த விபத்து மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் தன்னாமுனைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :