இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு காரியாலய அடையாள அட்டை வழங்கிவைப்பு



நூருல் ஹுதா உமர்-

இறக்காமம் பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளின் ஒரு அங்கமாக காரியாலய அடையாள அட்டையினை, பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் 2021/22 ம் ஆண்டளவில் புதிதாக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றம் பெற்று வந்த உத்தியோகத்தர்களுக்கு காரியால அடையாள அட்டை வழங்கி வைக்கும் முதற்கட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் றிம்ஷியா அர்சாட், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு காரியாலய அடையாள அட்டைகளை வழங்கி வைத்தனர். மேலும் உற்பத்தி திறன் பிரிவின் தொழிநுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்களான சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். சப்றின் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :