ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமெனக் கோரி நேற்று (09) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது.
செய்தி சேகரிப்பின்போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், ஊடக அமைப்பு என்ற ரீதியில் பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
0 comments :
Post a Comment