மட்டக்களப்பு செங்கலடி எரிபொருள் நிலையத்தில் இன்று காலை முதல் குழப்ப நிலையை காணமுடிந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், ஊழியர்கள் மொத்தமாக 1800 பேருக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் பொது மக்கள் செங்கலடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 04 நாட்களுக்கு மேலாக காத்திருப்பதாகவும் தமக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் இவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர் ஆகியோர் கலந்துரையாடி முதற்கட்டமாக 200 பேர் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதாக தீர்மானம் எடுத்ததால் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
வைத்தியசாலை ஊழியர்கள் ஒருபுரமாகவும் பொது மக்கள் ஒருபுரமாகவும் எரிபொருள் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment