கல்குடா - வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மரக்கறிக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் மரக்கறிக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது.

அல்-இன்ஷானியா நிறுவனம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கான இரண்டு பழமரக்கன்றுகள் உள்ளடங்களாக மிளகாய், கத்தரி, தக்காளிக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :