காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு பெரு வரவேற்பு.



காரைதீவு சகா-
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று காரைதீவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 57வது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் இனிப்பு வழங்கி அவர்களை வரவேற்றார்.

கடந்த 12 வருடங்களாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி சென்ற வேல்சாமி மகேஸ்வரன் அடியார்களுக்கு தீப ஆராதனை செய்து வரவேற்க யாத்திரை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா வரவேற்புரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, பாதயாத்திரை அடியார்கள் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்து விசேட பூஜையில் கலந்து கொண்டார்கள் .

நேற்று காலை சித்தானைக்குட்டி மடாலயத்திற்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

இன்று(12) செவ்வாய்க்கிழமை பாதையாத்தீரீகர்கள் மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தை தரிசிக்க இருக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :