கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் இன்று காலை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த என்.மதிவண்ணன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக கடந்த 2022.03.31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை தரம் – II யைச் சேர்ந்த ஏ.ஜீ.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இவர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யா, நிருவாக உத்தியோகத்தர் எ.சுவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :