2023 ஆண்டின் கிழக்கு மாகாண இடமாற்ற சபையை புறக்கணிக்கப் போவதாக முகமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் அறிவிப்பு !!



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களது 2023 ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றுச் சபை தவிசாளராக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு என் மணிவண்ணன் அவர்கள் நியமிக்கப்படுமிடத்து குறித்த இடமாற்ற சபையின் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக அனைத்து முகமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது

இது தொடர்பாக அனைத்தும் சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ ஜி முபாரக் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பிரதேச சபையிலும் இல்லாதவகையில், வவுணதீவு பிரதேச சபையில் பதவி நிலை உதவியாளர் எனும் பதவி உருவாக்கப்பட்டு, அபிவிருத்தி உத்தியோகத்தரிடன் அப்பதவிக்கான பொறுப்புகளாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்க்கு உரிய கடமைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்னும் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க முன்னெடுப்புகளுக்கு பொருத்தமான தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டி உள்ளனர்

அத்துடன் இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு செயலாளரின PA/CS/6/2/combined இலக்க 2021.01.17 மற்றும் 14/2013 இலக்க 2013.07.14 ந் திகதிய சுற்றறிக்கை மற்றும் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட CS/DOS/21/01/02 இலக்க 2017.04.19 சுற்றறிக்கைகளுக்கு மாற்றமான செயல்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார்

இவ்வாறான அதிகாரியினால் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கவனத்தில் கொண்டதாக, வருடாந்த இடமாற்றுச் சபையின் செயல்பாடுகள் நியாயமான முறையில் அமையாது என கருதுவதால் இந்த இடமாற்றச் சபையை புறக்கணிக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு மாகாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சக தொழிற்சங்கங்களான இலங்கை அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கம், வடகிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் கோரிக்கை கொடுத்துள்ளார்

இது குறித்த கடிதம் அனைத்து முக அமைப்பு சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ ஜி முபாரக் அவர்களினால் இன்று 2022.08.27 இலங்கை அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது விடம் அவயது அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :