மாவட்ட விளையாட்டு விழாவில் தம்பலகாமம் பிரதேச கழக அணி மெய்வல்லுனர் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது



ஹஸ்பர்-
பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்டு வந்த மாவட்ட விளையாட்டு விழா நிகழ்வில் மெய்வல்லுனர் போட்டியில் தம்பலகாமம் பிரதேச கழக அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.

குறித்த மாவட்ட மட்ட இறுதிப் போட்டி நிகழ்வானது மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.நௌபீஸ் அவர்களின் கண்காணிப்பின் கீழ் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் இன்று (21) இடம் பெற்றது.இதன் போது மெய்வல்லுனர் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களையும், 06 வெள்ளி பதக்கங்களையும், 03 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 19 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டனர்.

இதில் மைதான நிகழ்ச்சி நிரல் வீரராகவும், அனைத்து சகல துறை வீரராகவும் ஏ.ஆபித் தெரிவாகினார்.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.டி.ஹாரிஸ் குறித்த வீரர்களுக்காக திறம்பட பயிற்சியளித்து வந்துள்ளார். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சார்பாகவும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :